இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.
காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.
காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம். அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.
‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?
ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?
தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா? 1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.
அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.
காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'காணாமல் போனவர்களின்' புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய் இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.
இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன. வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது. அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது. காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.
ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.
‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.
சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர். இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?
பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான். ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?
இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர். காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.
ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா? விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.
காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.
ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர். விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.
‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.
இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.
சனி, 18 செப்டம்பர், 2010
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
இந்திய அரசு பயங்கரவாதம் & காஷ்மீர் மக்களின் கண்ணீர்: தெகல்கா வாரஇதழின் ரிப்போர்ட்.
காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே கடந்த வாரம் தெகல்கா வாரஇதழில் வெளிவந்ததுள்ளது இந்த கட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை. கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.
நான் எப்பொழுதும் சண்டையை விரும்பியது கிடையாது. கல்லூரி காலங்களில் என் நண்பர்கள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விமர்சனம் செய்வார்கள். என்னால் ஒரு உடல் வலு இல்லாதவனை கூட அடிக்க இயலாது என்றும் கூட சொல்வார்கள். ஆனால் நான் கோழை அல்ல. என்னை பொருத்தவரை பெரும்பான்மையான சண்டைகள் பயனில்லாதவை. அகிம்சாவாதி என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, கருத்து விவாதங்கள் போன்ற பல நல்ல வழிகள் உள்ளன என்பதே என் கருத்து.
ஆனால் இன்று நான் ஒரு ஊடகவியலாளனாக எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான் கொண்டிருக்காவிட்டால், எனது நண்பர்களை போலே நானும் காசுமீரத்து நகரவீதிகளில் கல்லெறிந்து கொண்டிருப்பேன்.ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், படுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை மட்டுமே ஏற்படுத்தி வந்தன. ஆனால் கடந்த இரு மாதங்களாக காசுமீரில் நடப்பவை எல்லாம் தெளிவான நீரோடையை போல உள்ளது. உலகம் காசுமீரில் நடப்பதை கண்டும் காணாமல் வாய் மூடி மௌனித்துள்ளது. இந்த மௌனம் அகிம்சாவாதத்தை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுகொண்டே வருகின்றது. இந்த கள்ள மௌனமே எல்லா வன்முறைகளும் ஆரம்பிக்க காரணமாகும்.
வீட்டிலிருந்து வருகின்ற எல்லா அலைபேசி அழைப்புகளுமே இதயத்தை பிளக்கக் கூடிய செய்திகளாக உள்ளன. என்னுள் வன்முறை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வதை உணர்கின்றேன் நான். எங்கள் வீட்டின் அருகிலுள்ள காய்கறி கடைக்காரர் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று என் அம்மா எனக்கு கூறிய போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வரும் முன்பு என் பக்கத்து வீட்டிலிருந்து கடைசி நபர் அவர் ஒருவர் மட்டும் தான். விடைபெறும் முன் இருவரும் புன்னகையை பரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை கடுங்கோபம் சூழ்ந்துகொண்டுள்ளது. மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் மிகக்கடுமையான கோபத்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள அனைவரையும் கடுமையாக தாக்குகின்றனர் என என்னிடம் கூறினான் என் தம்பி.
தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் நண்பன் கடந்த வாரம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவனது பணிகளுக்கு இடையிலும் அவன் காசுமீரில் அரச படையினால் அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுவன் சமீர் அகமதின் உடலை அவனும் பார்த்திருப்பான் என நினைக்கின்றேன்.அவனது உடலெங்கும் லத்தி குச்சியின் வரிகள் சாரை, சாரையாக உள்ளன. அவன் தின்று கொண்டிருந்த மிட்டாயின் மீதம் இன்னும் அவனது வாயில் அப்படியே உள்ளது. நான் அவனை சமாதனப்படுத்த முயல இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் சமாதனப்படுத்திக் கொண்டோம். அடுத்த நாள் காலை அவன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்லப் போவதாக கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை மட்டுமே கூறுகின்றனர். மேலும் அவர்களின் பொய்யை அவர்கள் உண்மையென்று நம்புகின்றார்கள்” என்றான் அவன்.
இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் பரவலாக நம்பப்படுகின்றது, அதாவது அரச படைகள் காசுமீரத்து மக்களை பாதுகாக்கின்றனர் என்பதே அந்த “பொய்”. ஆனால் காசுமீரிகள் தாங்கள் அரசபடைகளால் பாதுகாக்கப்படுவதாக நம்புவதே இல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் அரசபடையை “பாதுகாவலர்கள்” என்றும், அவர்கள் தான் தீவிரவாதிகளிடம் இருந்து காசுமீரிகளை பாதுகாக்கின்றனர் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தான் காசுமீரிகளை பாதுகாக்க வேண்டியுள்ளது என்பதே உண்மை. காசுமீரிகள் தங்களை ஆக்கிமிரத்துள்ள இந்த படைகள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோருகின்றனர். அரசபடைகள் மீது அவர்கள் கொண்டுள்ள உணர்வு பயம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்றவை மட்டுமே.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை சுட்டதில் 55 ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் காசுமீரில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். ஒன்று இவர்கள் கல்லெறிந்து கொண்டிருந்திருக்கலாம் அல்லது அண்டை வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காசுமீரில் பதட்டநிலை ஆரம்பிக்கும் காலகட்டங்களில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வலத்திற்கும் சென்ற நான் மக்கள் மிகக்கடுமையான கோபத்துடன் இருப்பதை கண்டேன். கங்பக் என்ற பகுதியில் 17 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவனது இரு நண்பர்கள் அவனை காவல்துறை அழைத்துச் சென்றதாகவும், பின்னால் அவன் நீரில் மூழ்கி இறந்துவிட்டான் என காவல் துறையை கூறியதாகவும் ஊடகங்களுக்கு சொன்னார்கள். ஆனால் இறந்த சிறுவன் நன்கு நீச்சல் தெரிந்தவன், ரண அறுவை சிகிச்சையில் தலையில் இரண்டு பலத்த காயங்கள் இருப்பது தெரிந்தது.
இதற்கு மறு நாள் “NDTV” என்ற செய்தி ஊடகத்தில் பேசிய மாநில முதல்வர் பரூக் அப்துல்லா “அவனது நண்பனது உயிர் முக்கியம் எனத் தெரிந்திருந்தால், இந்த இருவரும் அவனை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க வேண்டியது தானே” என கேட்டார். இவ்வாறு கேட்பதற்கு பரூக் அப்துல்லாவால் மட்டும் தான் முடியும், அதிகாரவர்க்கத்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவர்களை பொருத்த வரையில் காசுமீரிகள் “PDP” யின் பணத்திற்காகவும், பாகிசுதானின் உளவு நிறுவனங்களுக்காகவும் உயிரை விடும் தரகர்கள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு காலம் வாழ்ந்ததால் பரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வந்துள்ளது. முஃப்திகளோ இவர்களை விட மோசம், அவர்கள் எப்பொழுது பிரிவினை கோருவார்கள், எப்பொழுது இந்திய தேசியவாதிகளாக மாறுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. அவர்களின் தேவை எல்லாம் ஆட்சி அதிகாரம் மட்டும் தான். மத்திய அரசு பரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெகபூபாவை முதல் மந்திரி ஆக்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.
காசுமீரிகளுக்கும், அப்துல்லாக்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. காசுமிரீகளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிகள் தயாராக இருக்கும், அப்துல்லாக்களை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்களும், முப்திக்களும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இருபது வருட காலங்களில் இங்கு கொல்லப்பட்டுள்ள 70,000 மக்களின் புதைகுழிகளில் தங்கள் பொய்யையும் சேர்த்தே அவர்கள் புதைத்து வந்துள்ளனர். ஒரு காலத்தில் தேசிய காங்கிரசின் தீவிரமான ஊழியராக இருந்த எங்கள் உறவினர் ஒருவர் பிற்காலத்தில் அதே கட்சி காசுமீரிகளுக்கு துரோகம் செய்து விட்டது எனக் கூறினார் என்பதன் பொருள் எனக்கு இப்பொழுது தான் புரிகின்றது. சேக் அப்துல்லா டோர்கா மன்னர்களின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட மோசமான அடக்குமுறை அரசிடம் ஒப்படைத்து விட்டார் என அவர் தினமும் கூறுவார்.
சிறீநகரின் கசூரி பாக் பகுதியில் வயதான தந்தை ஒருவர் கொல்லப்பட்ட தனது மகனின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவரை அவரது மகனின் உடலை விட்டு பிரித்துச் செல்ல முயன்று கொண்டிருந்தனர். ஆனால் அவர் மகனின் உடலை விட்டு பிரியாமல் அருகிலேயே இருந்தார். அவரது சட்டை மகனின் இரத்ததில் நனைந்து போனது, அவரது வெள்ளை தாடி இரத்தத்தால் சிகப்பு நிறமானது. அந்த படத்தை நான் பார்க்க பார்க்க என்னுள் ஏற்படும் வலியின் ரணம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இறந்த தனது மகனின் உடலை கட்டியணைத்து தனது சோகத்தை ஒரு தந்தை வெளிபடுத்துவதை தவிர அவரால் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. பரூக் அப்துல்லாவால் அந்த தந்தையை அடக்குமுறையை மீறி அரச படைக்கு எதிராக கல்லெறிவதை தடுக்க குடியுமா? அந்த வயதான மனிதரின் இடத்தில் பரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பார், ஒரு தந்தையைப் போலவா? ஒரு முதல்வரை போலவா?. இந்நேரம் இந்நகரமே துண்டாடப்பட்டிருக்காதா? சிறீநகரம் பற்றி எரிந்திருக்காதா?
தங்களின் நேசத்திற்குரிய இறந்த உறவுகளை கல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்கள் அவர்களின் தந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள். இது மட்டும் எப்படி தவறாகும்? காசுமீரை சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று சுருக்கி பார்த்திட முடியாது, அது ஒரு மீக நீண்ட குருதி தோய்ந்த வரலாற்றை கொண்டது. மத்திய ஆயுத படையால் அனாதையாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மட்டும் கல்லெறிய ஆரம்பித்தால் உங்களால் 60,000 கல்லெறிபவர்களை காண முடியும், இவர்களுடன் அரச படையால் விதவையாக்கப்பட்டவர்களும் சேர்ந்தாலே 30,000 பெண்கள் ஒவ்வொரு பதுங்கு குழி மற்றும் ஒவ்வொரு படை வீரரை நோக்கியும் கல்லெறிவதை நீங்கள் காணலாம்.
கையில் கல்லுடன் ஒரு சிறுவன் படை வீரருக்கு எதிராக வந்து நிற்கும் போது அவனுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள படை வலுவின் வித்தியாசம் நன்கு தெரியும். அவன் என்ன தான் சரியாக குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய காயமோ அல்லது ஒன்றிரண்டு தையல்களுடனான காயத்தை மட்டும் தான் படை வீரனுக்கு கொடுக்க முடியும் இதற்கே அவன் படைவீரனின் காலில் உள்ள பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத மேல் சட்டை, தலைக் கவசம் இதை எல்லாம் மீறி அவன் எறியும் கல் செல்ல வேண்டும். ஆனால் படை வீரனின் துப்பாக்கியில் இருந்து வரும் துவக்கு(Bullet) மற்றும் படை வீரன் எறியும் கண்ணீர் புகைக்குண்டுகளினால் அந்த சிறுவன் மிகக் கடுமையாக பாதிக்கப்படலாம் அல்லது உயிரையும் கூட இழக்கக்கூடும் என்பது அந்த சிறுவன் மற்றும் படைவீரன் என இருவருக்குமே தெரியும்.
தனது ஆயுதமாக எப்பொழுது அந்த சிறுவன் கல்லை கையிலெடுக்கத் தொடங்கினானோ அப்பொழுதே அவனது போராட்டம் சமூக நெறிகளின் படி(Social Moral) உயர் நிலையை அடைந்துவிடுகின்றது. அந்த சிறுவனது நோக்கம் படைவீரனை கொல்வது தான் என்பது மிகவும் முட்டாள்தனமான ஒரு கருத்து. இந்த ஒரு காரணத்தினால் தான் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்றுவரும் கல்லெறியும் போராட்டங்களில் ஒரு படை வீரனோ, காவல் துறையைச் சேர்ந்தோரோ கூட இதுவரை இறக்கவில்லை. ஐந்து கல்லெறியும் போராளிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட காவல்துறை அல்லது படை வீரர்கள் பலரது புகைப்படங்களை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இது வரை இறந்ததில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் மொழியை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இதனால் எல்லா மனிதர்களும் புரிந்த ஒரு மொழியில் பேச வேண்டும் என காசுமீரிகள் எண்ணினார்கள். கடந்த இரண்டு மாதங்களாக கல்லெறியும் மொழியின் மூலமாக தங்கள் துயரத்தை காசுமீரிகள் உலகத்தாரிடம் எடுத்துக் கூறுகின்றார்கள்.
எந்த தாயிடம் உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என பரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த தாயே வீதிகளுக்கு வந்து கல்லெறிய துவங்கியுள்ளார். கடந்த மாதம் தொலைக்காட்சியில் “இலசுகர் இ தொய்பாவின்” பணத்திற்காக இந்த கல்லெறிதல் நிகழ்வதாக காட்டிய போது அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” நான் எனக்கு அடையாளம் தெரிந்த சிலரை பார்த்தேன். அவர்கள் இருவரும் எனது வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் இரு பெண்கள். 2005ஆம் ஆண்டு அந்த பெண்களின் தம்பியை மத்திய ஆயுதப் படை கைது செய்து அழைத்துச் சென்ற பொழுது இவர்களில் ஒருவர் வெறும் கால்களில் மத்திய ஆயுதப் படை வண்டியை துரத்திக் கொண்டு நெடுதூரம் சென்றார். பத்து நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணின் தம்பியின் உடல் பக்கத்து தெருவில் கிடந்தது. அவனது தோல்கள் எரிந்த நிலையில் இருந்தன. அவனது உடலில் கனரக சக்கரங்கள் ஏறியது போலிருந்தது. அவனது பிறப்புறுப்பில் மின்சார கம்பிகள் இருந்தன. இந்த நிகழ்வுக்கு பின்னால் அந்த பெண்கள் முன்பு போல் இல்லை. 1995ல் தனது கணவனை தொலைத்து விட்ட (காணாமல் போன) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” பார்த்தேன். அரச படையால் கொல்லப்பட்ட மகனை பறிகொடுத்த தாயை நான் அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” பார்த்தேன். அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின் பின்னும் கடந்த 20 வருடங்களாக சொல்லாத துயரமான கதை உணடு அதை அவர்கள் தங்கள் கைகளில் உள்ள கல்லின் மூலமாக சொல்லுகின்றனர். அவர்கள் எறியும் கல் படைவீரரை நோக்கி செல்கின்றதா என்பது அவர்கள் நோக்கமல்ல. அவர்கள் நோக்கம் கல்லை எறிவது மட்டும் தான். குறிபார்த்து அடிப்பது அல்ல. இதற்காக தான் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்துள்ளனர்.
பெண்கள் தான் இந்த பிரச்சனையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் அரச படைகள் நடத்தும் உளவியல் தாக்குதல்களாகும். ஆனால் இவை எல்லாம் மிகவும் குறைத்தே இது வரை மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த வலி பெண்களுக்கும், மனவியல் மருத்துவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றாகும். கல்லெறிவதை அவர்கள் இராணுவத்திற்கு தரும் பேதி மருந்தாக பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை கல்லை எறியும் போதும் தங்கள் இதயக்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாடத்தையும் அவர்கள் இராணுவத்திற்கு கற்பிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த எனது அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்கள் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர் மத்திய ஆயுத படையைச் சார்ந்தவர்கள். அவன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். எனது அத்தையின் பத்து நிமிட கெஞ்சலுக்கு பின்னரே அவன் படைவீரர்கள் அவனை பார்த்து மிரட்டிய வார்த்தைகளை சொன்னான். எனது அத்தை வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். கோபத்தில் தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தனது வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த விடுதலை போராட்ட ஊர்வலத்தில் தன்னையும் தன் மகனையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுதலை முழக்கங்களை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவர்கள் இருவருமே வீட்டை விட்டு வந்து இது போன்ற ஊர்வலத்தில் கலந்து கொள்வது இது தான் முதல் முறை. எனது அத்தை தனது கைகளில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற வாசகங்களையும், அந்த ஐந்து வயது சிறுவனோ அதே வாசகங்களை தனது வீட்டு சுவர்களில் எழுதிவைத்தான். இந்த ஒரு வாக்கியம் மட்டும் தான் அவனுக்கு ஆங்கிலத்தில் அவனுக்குத் தெரியும்.இது போன்ற சிறுவர்கள் தான் சிறீநகரின் அடைக்கப்பட்ட கடைக் கதவுகளிலும், யாருமில்லாத சாலைகளிலும், சுவர்களிலும் இது போன்ற விடுதலை முழக்கங்களை எழுதுகின்றனர்.
பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற பிரச்சனைகளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுதலை நிகழ்வு சென்று விட்டது. காசுமீர் துப்பாக்கிகளிலிருந்து விடுதலை முழக்கங்களுக்கு மாறிவிட்டது. இதில் கல்லெறிவது கூட தங்கள் அமைதி வழி போராட்டம் அரசால் மிகக்கடுமையாக அடக்கப்படும் போது மட்டுமே நிகழ்கின்றது. 2008ல் 3 இலட்சம் மக்கள் வீதிகளுக்கு வந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மனித சங்கலி போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஒருவர் கூட எந்த ஒரு பதுங்கு குழியையும், படை வீரரையும் தொடக்கூட இல்லை. ஆனால் இந்த வருடம் காசுமீர் மக்களின் அமைதி ஊர்வலங்கள் அரசால் கட்டாயமாக தடை செய்யப்பட்டன. கூட்டத்தை கலைப்பதற்காக மக்களை சுடுவதற்கு இராணுவத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த வருடத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் கூடுவதற்கு இராணுவம் அனுமதியே கொடுக்கவில்லை. இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை நோக்கி அவர்கள் பலமுறை சுட்டனர். இதனால் பலர் கல்லெறிபவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
காசுமீரில் இன்று இராணுவத்தினால் ஒரு மருத்துவமனையையோ, தங்களுக்கு உதவக் கூடிய வீட்டையோ காண்பது அரிதான ஒன்று. காசுமீரிகள் இந்தியாவுடனான தங்கள் பிரச்சனையை துப்பாக்கிகள் இல்லாமல் தீர்வு காணுகின்றனர். ஊடகங்கள் காசுமீரிகளை பாகிசுதானின் உளவு நிறுவனத்தின் காசுக்காகவும், PDP யின் காசுக்காகவும் போராடுபவர்களை போல காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீநகரின் எல்லா தொகுதிகளையும் வென்றது தேசிய காங்கிரசு, PDP அல்ல. இந்த இடம் தான் கல்லெறிதலில் மிக முக்கியமான நகரமாகும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு நேர்காணலில் பரூக் அப்துல்லாவிடம் இந்த கேள்வியை கேட்டேன், நீங்கள் உங்களை காசுமீரிகளின் தலைவராக பார்க்கின்றீர்களா?, அல்லது காசுமீரில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பார்க்கின்றீர்களா?. அவர் மிகவும் கோபமாக சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த வாக்குகள் எல்லாம் எங்கு சென்று விட்டன என எண்ணுகிறார் அவர்?
கல்லெறிபவர்களும், அமைதி வழியில் போராடுபவர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்ந்தால் காசுமீரிகள் தாங்கள் முன்பு வைத்திருந்த துப்பாகிகளை கண்டிப்பாக மீண்டும் கையிலெடுப்பார்கள். உலகிலேயே அதிக ஆயுத கொள்வனவு செய்யும் நாடான இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள 7,00,000 துருப்புகளுக்கும் எதிரான இன்னொரு ஆயுத புரட்சியும் தீவிரவாதம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக கையில் கல்லுடன் மோதும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் உள்ள கல்லை கீழே வைத்து விட்டு தாங்களும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990களில் இருந்ததைவிட மிக மோசமாக மாறிவிடும். காசுமீர்களுக்கு தெரியும் எவ்வாறு ஆயுதப் போராட்டம் தங்கள் குழந்தைகளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவர்கள் தங்கள் விடுதலைக்காக அதைச் செய்வார்கள். ஆனால் தற்போது காசுமீர் போராட்டம் வெறும் கற்களுடன் மட்டுமே நடைபெறுகின்றனது. ஆனால் தங்களைச் சுற்றி உள்ள இந்த கண்ணாடி மாளிகைகள் அப்படியே இருக்காது. போர் மிகத் தீவிரமான ஒன்றாக மாறும், இருந்தபோதிலும் என்னுள் உள்ள அமைதி விரும்பி அந்த நிலைக்கு காசுமீர் தள்ளப்படாது என்று கூறுகிறான்.
காசுமீரில் இசுலாம் என்ற வார்த்தை தொன்று தொட்டு இருந்து வருகின்றது, இதை காசுமீரிகள் தங்களுக்கே உரிய தனித்துவ முறையில் புரிந்துகொண்டுள்ளனர். எனது தாயார் புனித தளங்களுக்கு செல்வார். எனது பெண் தோழியும் கூட. எனக்கு தெரிந்த எல்லா பெண்களும் அங்கே செல்வார்கள். மசூதிகளை விட அதிகமான கூட்டம் இந்த புனித தளங்களில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு பல நூறு வருடங்களாக இருந்து வருகின்றது. இந்த புரட்சிகளும் கூட ஒழுக்கு நெறிகளை பின்பற்றியே நடக்கின்றது. காசுமீரிகள் பணிவானவர்கள் மற்றும் விட்டுக் கொடுப்பவர்கள் என்பதை எப்பொழுது எங்களின் பலவீனமாக அரசு கருத ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது அரசு அடக்குமுறை தகர்க்கப்படும்.
1990களில் காசுமீர் பண்டிட்டுகளுக்கு என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது. நான் அப்பொழுது சிறியவன். ஆனால் இன்று அந்த நிகழ்வு பல திரிபுகளுக்கு உள்ளாகிவிட்டது. காசுமீரில் பண்டிட்டுகளையே காணாத இசுலாமிய இளைய தலைமுறைகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த வருடம் என்ன நடைபெற்றது என்பது பற்றிய பல கதைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன நடைபெற்றது என தெளிவாக தெரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாமல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்களது பழைய குடும்ப புகைப்படங்களில், பல காசுமீர் பண்டிட்டுகளை நான் பார்த்ததுண்டு. எங்களது குடும்பத்தை பொருத்தவரையில் பண்டிட்டுகளுக்கு எதிராக பேசுவது தவறு, அவர்கள் விடுதலையை எதிர்க்கும் வலது சாரி இயக்கத்தை சார்ந்தவர்களாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் சரி. பண்டிட்டுகள் மீண்டும் அவர்களின் பூர்விக நிலங்களில் வந்து குடியேற வேண்டும். என்னை போன்ற இளைஞர்கள் அவர்களை வேறு யாரோ ஒருவர் என எண்ணாமல் நண்பர்கள் போல பழகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதும் உண்டு.
என்னை பொருத்தவரை காசுமீர் என்பது கென்றி காரிட்டர் பிரசனின் புகைப்படத்தை போல. அந்த புகைப்படத்தில் ஒரு பெண்கள் கோ.இ.மாரன் மலை உச்சியில் நின்று கொண்டு தங்களது தெய்வங்களை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் பழைய காசுமீரி பர்காவிலும், இன்னொருவர் காசுமீரின் பாரம்பரிய உடையுடனும் மலைகளையும், அகண்ட வானவெளியை பார்த்த மாதிரி இருப்பார்கள். அவர்களின் இறைவழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவர்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தது. இந்த பிரச்சனை ஏற்கனவே அவர்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது. அமைதி வழி போராளிகள் கொல்லப்படுவது தொடர்ந்தால் இந்த பெண்களும் ஒரு நாள் காணாமல் போய் விடுவார்கள். நாம் கனவு கண்ட காசுமீர் கனவிலேயே போய்விடும் போல் உள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் நானும் “விடுதலை” போராட்டம் முடிவடைந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் துப்பாக்கிகளிலிருந்து கல் என்ற ஆயுதமாக மாற எடுத்துக் கொண்ட காலம் தான் அது என்பது எனக்கு இன்று புரிகின்றது. 1953களில் சர்வசன வாக்கெடுப்பு என்று இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989களில் சம்மு காசுமீர் விடுதலை அமைப்பு என்றானது, இன்று ஒன்பது வயது கல்லெறியும் சிறுவன் என்றிருக்கும் போராட்ட நிலையில் என்றும் விடுதலை முழக்கம் மட்டும் மாறவே இல்லை. போராட்ட வழிமுறைகள் மட்டுமே மாறியுள்ளன.
“பெரிய பொருளாதார மற்றும் அதிகார போட்டியில் வளர்ந்து வரும் நாடான இந்தியா” காசுமீரி மக்களின் மனங்களை கவர பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து முயற்சி செய்தது. பெரும்பான்மையானோர் அந்த பணத்தை பெற்றிருப்பினும் தங்கள் உணர்வுகளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வதாயில்லை. இது வழிமுறை 1. இது சரியாக நடைபெறாததால் வழிமுறை 2ல் தவறான நபர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் கவனிப்பு நடந்தது. ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. இந்தியா தனது பணத்தையும், ஆயுதத்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிரச்சனையை காசுமீரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். இரண்டு வழிகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிரச்சனையில் சம பங்குள்ளவர்கள் என கருதி தில்லி காசுமீரி மக்களுடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது. அல்லது இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி நோயை அல்லாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தும் வேலையில் ஈடுபடுதல். தேசிய காங்கிரசு PDP போன்ற அரசியல் கட்சிகள் கூறும் இந்திய அரசமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்றவற்றை எல்லாம் மைய அரசு தூக்கியெறிந்து பல நாளாகி விட்டது.
மக்கள் கூட்டமைப்பின் தலைவர் “சாச்சத் லோனோ கூறும் “அடையக்கூடிய தேசியம்” என்பதை பற்றி இரண்டு வருடமாக ஒருவர் கூட இதுவரை வாயே திறக்கவில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஊசலாட்டதில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்படத்திற்கு மட்டும் அல்லாமல் குறைந்தபட்சம் நேர்மையுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என நாங்கள் நம்புகின்றோம் என்றார் அவர்.
இந்திய படை வீரர்களோ மிகவும் ஏழ்மையான கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமற்ற பதுங்கு குழிகளில் கழிக்கின்றனர். கல்லுக்கு பதிலாக காசுமீரத்து சிறுவர்களின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்கள். சுற்றி போடப்பட்டுள்ள முள்வேலிகள், உளவியல் ரீதியான கோளாறுகளால் அதிக பட்சமான தற்கொலைகளும், தங்கள் குடும்பத்தினரையே கொலை செய்தல் போன்றவையும் காசுமீரில் மிக அதிக அளவில் உள்ளன. இந்தியா இவர்களை தேச பகதிக்காக எரியும் மெழுகாய் மட்டும் பார்க்காமல் தகுதி வாய்ந்த குடிமகன்களாய் என்று பார்க்கத் தொடங்குகின்றதோ அன்று தான் காசுமீரிகளுக்கும், படையினருக்கும் உண்மையான விடுதலை ஆகும்.
இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேறலாம் அல்லது அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம். ஆனால் 63 வருடங்களாகியும் இந்தியாவால் காசுமீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை.
நான் எப்பொழுதும் சண்டையை விரும்பியது கிடையாது. கல்லூரி காலங்களில் என் நண்பர்கள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விமர்சனம் செய்வார்கள். என்னால் ஒரு உடல் வலு இல்லாதவனை கூட அடிக்க இயலாது என்றும் கூட சொல்வார்கள். ஆனால் நான் கோழை அல்ல. என்னை பொருத்தவரை பெரும்பான்மையான சண்டைகள் பயனில்லாதவை. அகிம்சாவாதி என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, கருத்து விவாதங்கள் போன்ற பல நல்ல வழிகள் உள்ளன என்பதே என் கருத்து.
ஆனால் இன்று நான் ஒரு ஊடகவியலாளனாக எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான் கொண்டிருக்காவிட்டால், எனது நண்பர்களை போலே நானும் காசுமீரத்து நகரவீதிகளில் கல்லெறிந்து கொண்டிருப்பேன்.ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், படுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை மட்டுமே ஏற்படுத்தி வந்தன. ஆனால் கடந்த இரு மாதங்களாக காசுமீரில் நடப்பவை எல்லாம் தெளிவான நீரோடையை போல உள்ளது. உலகம் காசுமீரில் நடப்பதை கண்டும் காணாமல் வாய் மூடி மௌனித்துள்ளது. இந்த மௌனம் அகிம்சாவாதத்தை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுகொண்டே வருகின்றது. இந்த கள்ள மௌனமே எல்லா வன்முறைகளும் ஆரம்பிக்க காரணமாகும்.
வீட்டிலிருந்து வருகின்ற எல்லா அலைபேசி அழைப்புகளுமே இதயத்தை பிளக்கக் கூடிய செய்திகளாக உள்ளன. என்னுள் வன்முறை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வதை உணர்கின்றேன் நான். எங்கள் வீட்டின் அருகிலுள்ள காய்கறி கடைக்காரர் அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று என் அம்மா எனக்கு கூறிய போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வரும் முன்பு என் பக்கத்து வீட்டிலிருந்து கடைசி நபர் அவர் ஒருவர் மட்டும் தான். விடைபெறும் முன் இருவரும் புன்னகையை பரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை கடுங்கோபம் சூழ்ந்துகொண்டுள்ளது. மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் மிகக்கடுமையான கோபத்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள அனைவரையும் கடுமையாக தாக்குகின்றனர் என என்னிடம் கூறினான் என் தம்பி.
தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் நண்பன் கடந்த வாரம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவனது பணிகளுக்கு இடையிலும் அவன் காசுமீரில் அரச படையினால் அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுவன் சமீர் அகமதின் உடலை அவனும் பார்த்திருப்பான் என நினைக்கின்றேன்.அவனது உடலெங்கும் லத்தி குச்சியின் வரிகள் சாரை, சாரையாக உள்ளன. அவன் தின்று கொண்டிருந்த மிட்டாயின் மீதம் இன்னும் அவனது வாயில் அப்படியே உள்ளது. நான் அவனை சமாதனப்படுத்த முயல இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் சமாதனப்படுத்திக் கொண்டோம். அடுத்த நாள் காலை அவன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்லப் போவதாக கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை மட்டுமே கூறுகின்றனர். மேலும் அவர்களின் பொய்யை அவர்கள் உண்மையென்று நம்புகின்றார்கள்” என்றான் அவன்.
இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் பரவலாக நம்பப்படுகின்றது, அதாவது அரச படைகள் காசுமீரத்து மக்களை பாதுகாக்கின்றனர் என்பதே அந்த “பொய்”. ஆனால் காசுமீரிகள் தாங்கள் அரசபடைகளால் பாதுகாக்கப்படுவதாக நம்புவதே இல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் அரசபடையை “பாதுகாவலர்கள்” என்றும், அவர்கள் தான் தீவிரவாதிகளிடம் இருந்து காசுமீரிகளை பாதுகாக்கின்றனர் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தான் காசுமீரிகளை பாதுகாக்க வேண்டியுள்ளது என்பதே உண்மை. காசுமீரிகள் தங்களை ஆக்கிமிரத்துள்ள இந்த படைகள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோருகின்றனர். அரசபடைகள் மீது அவர்கள் கொண்டுள்ள உணர்வு பயம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்றவை மட்டுமே.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை சுட்டதில் 55 ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் காசுமீரில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். ஒன்று இவர்கள் கல்லெறிந்து கொண்டிருந்திருக்கலாம் அல்லது அண்டை வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காசுமீரில் பதட்டநிலை ஆரம்பிக்கும் காலகட்டங்களில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வலத்திற்கும் சென்ற நான் மக்கள் மிகக்கடுமையான கோபத்துடன் இருப்பதை கண்டேன். கங்பக் என்ற பகுதியில் 17 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவனது இரு நண்பர்கள் அவனை காவல்துறை அழைத்துச் சென்றதாகவும், பின்னால் அவன் நீரில் மூழ்கி இறந்துவிட்டான் என காவல் துறையை கூறியதாகவும் ஊடகங்களுக்கு சொன்னார்கள். ஆனால் இறந்த சிறுவன் நன்கு நீச்சல் தெரிந்தவன், ரண அறுவை சிகிச்சையில் தலையில் இரண்டு பலத்த காயங்கள் இருப்பது தெரிந்தது.
இதற்கு மறு நாள் “NDTV” என்ற செய்தி ஊடகத்தில் பேசிய மாநில முதல்வர் பரூக் அப்துல்லா “அவனது நண்பனது உயிர் முக்கியம் எனத் தெரிந்திருந்தால், இந்த இருவரும் அவனை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க வேண்டியது தானே” என கேட்டார். இவ்வாறு கேட்பதற்கு பரூக் அப்துல்லாவால் மட்டும் தான் முடியும், அதிகாரவர்க்கத்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவர்களை பொருத்த வரையில் காசுமீரிகள் “PDP” யின் பணத்திற்காகவும், பாகிசுதானின் உளவு நிறுவனங்களுக்காகவும் உயிரை விடும் தரகர்கள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு காலம் வாழ்ந்ததால் பரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வந்துள்ளது. முஃப்திகளோ இவர்களை விட மோசம், அவர்கள் எப்பொழுது பிரிவினை கோருவார்கள், எப்பொழுது இந்திய தேசியவாதிகளாக மாறுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. அவர்களின் தேவை எல்லாம் ஆட்சி அதிகாரம் மட்டும் தான். மத்திய அரசு பரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெகபூபாவை முதல் மந்திரி ஆக்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.

சிறீநகரின் கசூரி பாக் பகுதியில் வயதான தந்தை ஒருவர் கொல்லப்பட்ட தனது மகனின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவரை அவரது மகனின் உடலை விட்டு பிரித்துச் செல்ல முயன்று கொண்டிருந்தனர். ஆனால் அவர் மகனின் உடலை விட்டு பிரியாமல் அருகிலேயே இருந்தார். அவரது சட்டை மகனின் இரத்ததில் நனைந்து போனது, அவரது வெள்ளை தாடி இரத்தத்தால் சிகப்பு நிறமானது. அந்த படத்தை நான் பார்க்க பார்க்க என்னுள் ஏற்படும் வலியின் ரணம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இறந்த தனது மகனின் உடலை கட்டியணைத்து தனது சோகத்தை ஒரு தந்தை வெளிபடுத்துவதை தவிர அவரால் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. பரூக் அப்துல்லாவால் அந்த தந்தையை அடக்குமுறையை மீறி அரச படைக்கு எதிராக கல்லெறிவதை தடுக்க குடியுமா? அந்த வயதான மனிதரின் இடத்தில் பரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பார், ஒரு தந்தையைப் போலவா? ஒரு முதல்வரை போலவா?. இந்நேரம் இந்நகரமே துண்டாடப்பட்டிருக்காதா? சிறீநகரம் பற்றி எரிந்திருக்காதா?
தங்களின் நேசத்திற்குரிய இறந்த உறவுகளை கல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்கள் அவர்களின் தந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள். இது மட்டும் எப்படி தவறாகும்? காசுமீரை சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று சுருக்கி பார்த்திட முடியாது, அது ஒரு மீக நீண்ட குருதி தோய்ந்த வரலாற்றை கொண்டது. மத்திய ஆயுத படையால் அனாதையாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மட்டும் கல்லெறிய ஆரம்பித்தால் உங்களால் 60,000 கல்லெறிபவர்களை காண முடியும், இவர்களுடன் அரச படையால் விதவையாக்கப்பட்டவர்களும் சேர்ந்தாலே 30,000 பெண்கள் ஒவ்வொரு பதுங்கு குழி மற்றும் ஒவ்வொரு படை வீரரை நோக்கியும் கல்லெறிவதை நீங்கள் காணலாம்.
கையில் கல்லுடன் ஒரு சிறுவன் படை வீரருக்கு எதிராக வந்து நிற்கும் போது அவனுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள படை வலுவின் வித்தியாசம் நன்கு தெரியும். அவன் என்ன தான் சரியாக குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய காயமோ அல்லது ஒன்றிரண்டு தையல்களுடனான காயத்தை மட்டும் தான் படை வீரனுக்கு கொடுக்க முடியும் இதற்கே அவன் படைவீரனின் காலில் உள்ள பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத மேல் சட்டை, தலைக் கவசம் இதை எல்லாம் மீறி அவன் எறியும் கல் செல்ல வேண்டும். ஆனால் படை வீரனின் துப்பாக்கியில் இருந்து வரும் துவக்கு(Bullet) மற்றும் படை வீரன் எறியும் கண்ணீர் புகைக்குண்டுகளினால் அந்த சிறுவன் மிகக் கடுமையாக பாதிக்கப்படலாம் அல்லது உயிரையும் கூட இழக்கக்கூடும் என்பது அந்த சிறுவன் மற்றும் படைவீரன் என இருவருக்குமே தெரியும்.
தனது ஆயுதமாக எப்பொழுது அந்த சிறுவன் கல்லை கையிலெடுக்கத் தொடங்கினானோ அப்பொழுதே அவனது போராட்டம் சமூக நெறிகளின் படி(Social Moral) உயர் நிலையை அடைந்துவிடுகின்றது. அந்த சிறுவனது நோக்கம் படைவீரனை கொல்வது தான் என்பது மிகவும் முட்டாள்தனமான ஒரு கருத்து. இந்த ஒரு காரணத்தினால் தான் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்றுவரும் கல்லெறியும் போராட்டங்களில் ஒரு படை வீரனோ, காவல் துறையைச் சேர்ந்தோரோ கூட இதுவரை இறக்கவில்லை. ஐந்து கல்லெறியும் போராளிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட காவல்துறை அல்லது படை வீரர்கள் பலரது புகைப்படங்களை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இது வரை இறந்ததில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் மொழியை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இதனால் எல்லா மனிதர்களும் புரிந்த ஒரு மொழியில் பேச வேண்டும் என காசுமீரிகள் எண்ணினார்கள். கடந்த இரண்டு மாதங்களாக கல்லெறியும் மொழியின் மூலமாக தங்கள் துயரத்தை காசுமீரிகள் உலகத்தாரிடம் எடுத்துக் கூறுகின்றார்கள்.
எந்த தாயிடம் உங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என பரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த தாயே வீதிகளுக்கு வந்து கல்லெறிய துவங்கியுள்ளார். கடந்த மாதம் தொலைக்காட்சியில் “இலசுகர் இ தொய்பாவின்” பணத்திற்காக இந்த கல்லெறிதல் நிகழ்வதாக காட்டிய போது அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” நான் எனக்கு அடையாளம் தெரிந்த சிலரை பார்த்தேன். அவர்கள் இருவரும் எனது வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் இரு பெண்கள். 2005ஆம் ஆண்டு அந்த பெண்களின் தம்பியை மத்திய ஆயுதப் படை கைது செய்து அழைத்துச் சென்ற பொழுது இவர்களில் ஒருவர் வெறும் கால்களில் மத்திய ஆயுதப் படை வண்டியை துரத்திக் கொண்டு நெடுதூரம் சென்றார். பத்து நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணின் தம்பியின் உடல் பக்கத்து தெருவில் கிடந்தது. அவனது தோல்கள் எரிந்த நிலையில் இருந்தன. அவனது உடலில் கனரக சக்கரங்கள் ஏறியது போலிருந்தது. அவனது பிறப்புறுப்பில் மின்சார கம்பிகள் இருந்தன. இந்த நிகழ்வுக்கு பின்னால் அந்த பெண்கள் முன்பு போல் இல்லை. 1995ல் தனது கணவனை தொலைத்து விட்ட (காணாமல் போன) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” பார்த்தேன். அரச படையால் கொல்லப்பட்ட மகனை பறிகொடுத்த தாயை நான் அந்த “பணத்திற்காக கல்லெறியும் கும்பலில்” பார்த்தேன். அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரின் பின்னும் கடந்த 20 வருடங்களாக சொல்லாத துயரமான கதை உணடு அதை அவர்கள் தங்கள் கைகளில் உள்ள கல்லின் மூலமாக சொல்லுகின்றனர். அவர்கள் எறியும் கல் படைவீரரை நோக்கி செல்கின்றதா என்பது அவர்கள் நோக்கமல்ல. அவர்கள் நோக்கம் கல்லை எறிவது மட்டும் தான். குறிபார்த்து அடிப்பது அல்ல. இதற்காக தான் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்துள்ளனர்.
பெண்கள் தான் இந்த பிரச்சனையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் அரச படைகள் நடத்தும் உளவியல் தாக்குதல்களாகும். ஆனால் இவை எல்லாம் மிகவும் குறைத்தே இது வரை மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த வலி பெண்களுக்கும், மனவியல் மருத்துவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றாகும். கல்லெறிவதை அவர்கள் இராணுவத்திற்கு தரும் பேதி மருந்தாக பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை கல்லை எறியும் போதும் தங்கள் இதயக்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாடத்தையும் அவர்கள் இராணுவத்திற்கு கற்பிக்கின்றனர்.

பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற பிரச்சனைகளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுதலை நிகழ்வு சென்று விட்டது. காசுமீர் துப்பாக்கிகளிலிருந்து விடுதலை முழக்கங்களுக்கு மாறிவிட்டது. இதில் கல்லெறிவது கூட தங்கள் அமைதி வழி போராட்டம் அரசால் மிகக்கடுமையாக அடக்கப்படும் போது மட்டுமே நிகழ்கின்றது. 2008ல் 3 இலட்சம் மக்கள் வீதிகளுக்கு வந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மனித சங்கலி போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஒருவர் கூட எந்த ஒரு பதுங்கு குழியையும், படை வீரரையும் தொடக்கூட இல்லை. ஆனால் இந்த வருடம் காசுமீர் மக்களின் அமைதி ஊர்வலங்கள் அரசால் கட்டாயமாக தடை செய்யப்பட்டன. கூட்டத்தை கலைப்பதற்காக மக்களை சுடுவதற்கு இராணுவத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த வருடத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் கூடுவதற்கு இராணுவம் அனுமதியே கொடுக்கவில்லை. இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை நோக்கி அவர்கள் பலமுறை சுட்டனர். இதனால் பலர் கல்லெறிபவர்களாக ஆக்கப்பட்டார்கள்.
காசுமீரில் இன்று இராணுவத்தினால் ஒரு மருத்துவமனையையோ, தங்களுக்கு உதவக் கூடிய வீட்டையோ காண்பது அரிதான ஒன்று. காசுமீரிகள் இந்தியாவுடனான தங்கள் பிரச்சனையை துப்பாக்கிகள் இல்லாமல் தீர்வு காணுகின்றனர். ஊடகங்கள் காசுமீரிகளை பாகிசுதானின் உளவு நிறுவனத்தின் காசுக்காகவும், PDP யின் காசுக்காகவும் போராடுபவர்களை போல காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீநகரின் எல்லா தொகுதிகளையும் வென்றது தேசிய காங்கிரசு, PDP அல்ல. இந்த இடம் தான் கல்லெறிதலில் மிக முக்கியமான நகரமாகும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு நேர்காணலில் பரூக் அப்துல்லாவிடம் இந்த கேள்வியை கேட்டேன், நீங்கள் உங்களை காசுமீரிகளின் தலைவராக பார்க்கின்றீர்களா?, அல்லது காசுமீரில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பார்க்கின்றீர்களா?. அவர் மிகவும் கோபமாக சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த வாக்குகள் எல்லாம் எங்கு சென்று விட்டன என எண்ணுகிறார் அவர்?
கல்லெறிபவர்களும், அமைதி வழியில் போராடுபவர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்ந்தால் காசுமீரிகள் தாங்கள் முன்பு வைத்திருந்த துப்பாகிகளை கண்டிப்பாக மீண்டும் கையிலெடுப்பார்கள். உலகிலேயே அதிக ஆயுத கொள்வனவு செய்யும் நாடான இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள 7,00,000 துருப்புகளுக்கும் எதிரான இன்னொரு ஆயுத புரட்சியும் தீவிரவாதம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக கையில் கல்லுடன் மோதும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் உள்ள கல்லை கீழே வைத்து விட்டு தாங்களும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990களில் இருந்ததைவிட மிக மோசமாக மாறிவிடும். காசுமீர்களுக்கு தெரியும் எவ்வாறு ஆயுதப் போராட்டம் தங்கள் குழந்தைகளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவர்கள் தங்கள் விடுதலைக்காக அதைச் செய்வார்கள். ஆனால் தற்போது காசுமீர் போராட்டம் வெறும் கற்களுடன் மட்டுமே நடைபெறுகின்றனது. ஆனால் தங்களைச் சுற்றி உள்ள இந்த கண்ணாடி மாளிகைகள் அப்படியே இருக்காது. போர் மிகத் தீவிரமான ஒன்றாக மாறும், இருந்தபோதிலும் என்னுள் உள்ள அமைதி விரும்பி அந்த நிலைக்கு காசுமீர் தள்ளப்படாது என்று கூறுகிறான்.
காசுமீரில் இசுலாம் என்ற வார்த்தை தொன்று தொட்டு இருந்து வருகின்றது, இதை காசுமீரிகள் தங்களுக்கே உரிய தனித்துவ முறையில் புரிந்துகொண்டுள்ளனர். எனது தாயார் புனித தளங்களுக்கு செல்வார். எனது பெண் தோழியும் கூட. எனக்கு தெரிந்த எல்லா பெண்களும் அங்கே செல்வார்கள். மசூதிகளை விட அதிகமான கூட்டம் இந்த புனித தளங்களில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு பல நூறு வருடங்களாக இருந்து வருகின்றது. இந்த புரட்சிகளும் கூட ஒழுக்கு நெறிகளை பின்பற்றியே நடக்கின்றது. காசுமீரிகள் பணிவானவர்கள் மற்றும் விட்டுக் கொடுப்பவர்கள் என்பதை எப்பொழுது எங்களின் பலவீனமாக அரசு கருத ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது அரசு அடக்குமுறை தகர்க்கப்படும்.
1990களில் காசுமீர் பண்டிட்டுகளுக்கு என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது. நான் அப்பொழுது சிறியவன். ஆனால் இன்று அந்த நிகழ்வு பல திரிபுகளுக்கு உள்ளாகிவிட்டது. காசுமீரில் பண்டிட்டுகளையே காணாத இசுலாமிய இளைய தலைமுறைகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த வருடம் என்ன நடைபெற்றது என்பது பற்றிய பல கதைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன நடைபெற்றது என தெளிவாக தெரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாமல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்களது பழைய குடும்ப புகைப்படங்களில், பல காசுமீர் பண்டிட்டுகளை நான் பார்த்ததுண்டு. எங்களது குடும்பத்தை பொருத்தவரையில் பண்டிட்டுகளுக்கு எதிராக பேசுவது தவறு, அவர்கள் விடுதலையை எதிர்க்கும் வலது சாரி இயக்கத்தை சார்ந்தவர்களாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் சரி. பண்டிட்டுகள் மீண்டும் அவர்களின் பூர்விக நிலங்களில் வந்து குடியேற வேண்டும். என்னை போன்ற இளைஞர்கள் அவர்களை வேறு யாரோ ஒருவர் என எண்ணாமல் நண்பர்கள் போல பழகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதும் உண்டு.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் நானும் “விடுதலை” போராட்டம் முடிவடைந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் துப்பாக்கிகளிலிருந்து கல் என்ற ஆயுதமாக மாற எடுத்துக் கொண்ட காலம் தான் அது என்பது எனக்கு இன்று புரிகின்றது. 1953களில் சர்வசன வாக்கெடுப்பு என்று இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989களில் சம்மு காசுமீர் விடுதலை அமைப்பு என்றானது, இன்று ஒன்பது வயது கல்லெறியும் சிறுவன் என்றிருக்கும் போராட்ட நிலையில் என்றும் விடுதலை முழக்கம் மட்டும் மாறவே இல்லை. போராட்ட வழிமுறைகள் மட்டுமே மாறியுள்ளன.
“பெரிய பொருளாதார மற்றும் அதிகார போட்டியில் வளர்ந்து வரும் நாடான இந்தியா” காசுமீரி மக்களின் மனங்களை கவர பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து முயற்சி செய்தது. பெரும்பான்மையானோர் அந்த பணத்தை பெற்றிருப்பினும் தங்கள் உணர்வுகளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வதாயில்லை. இது வழிமுறை 1. இது சரியாக நடைபெறாததால் வழிமுறை 2ல் தவறான நபர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் கவனிப்பு நடந்தது. ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. இந்தியா தனது பணத்தையும், ஆயுதத்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிரச்சனையை காசுமீரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். இரண்டு வழிகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிரச்சனையில் சம பங்குள்ளவர்கள் என கருதி தில்லி காசுமீரி மக்களுடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது. அல்லது இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி நோயை அல்லாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தும் வேலையில் ஈடுபடுதல். தேசிய காங்கிரசு PDP போன்ற அரசியல் கட்சிகள் கூறும் இந்திய அரசமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்றவற்றை எல்லாம் மைய அரசு தூக்கியெறிந்து பல நாளாகி விட்டது.
மக்கள் கூட்டமைப்பின் தலைவர் “சாச்சத் லோனோ கூறும் “அடையக்கூடிய தேசியம்” என்பதை பற்றி இரண்டு வருடமாக ஒருவர் கூட இதுவரை வாயே திறக்கவில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஊசலாட்டதில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்படத்திற்கு மட்டும் அல்லாமல் குறைந்தபட்சம் நேர்மையுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என நாங்கள் நம்புகின்றோம் என்றார் அவர்.
இந்திய படை வீரர்களோ மிகவும் ஏழ்மையான கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமற்ற பதுங்கு குழிகளில் கழிக்கின்றனர். கல்லுக்கு பதிலாக காசுமீரத்து சிறுவர்களின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்கள். சுற்றி போடப்பட்டுள்ள முள்வேலிகள், உளவியல் ரீதியான கோளாறுகளால் அதிக பட்சமான தற்கொலைகளும், தங்கள் குடும்பத்தினரையே கொலை செய்தல் போன்றவையும் காசுமீரில் மிக அதிக அளவில் உள்ளன. இந்தியா இவர்களை தேச பகதிக்காக எரியும் மெழுகாய் மட்டும் பார்க்காமல் தகுதி வாய்ந்த குடிமகன்களாய் என்று பார்க்கத் தொடங்குகின்றதோ அன்று தான் காசுமீரிகளுக்கும், படையினருக்கும் உண்மையான விடுதலை ஆகும்.
இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேறலாம் அல்லது அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம். ஆனால் 63 வருடங்களாகியும் இந்தியாவால் காசுமீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)