ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

நாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தலித்கள் உயிருடன் எரித்துக் கொலை.


தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடைய நாய் தொடர்பாக ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றி தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் உயிரோடு எரியூட்டப்பட்டனர்.ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த யோகேஷ் என்பவரின் நாய் மீது ஜாட் இனத்தைச் சேர்ந்த ராஜேந்தர் கல் எறிந்தார். இதற்கு யோகேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கூட்டப்பட்ட கிராமப் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்நதது. இதனைத் தொடர்ந்து தலித்துகள் ஜாட் இனத்தவரால் தாக்கப்பட்டனர்.

இரு இனத்தவருக்குமான மோதல் முற்றி ஜாட் இனத்தவர் தலித்துகளின் 25 வீடுகளை தீயிட்டுக் கொழுத்தினர். இதில்இரண்டு தலித்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதுக்குறித்து தாரா சந்த் என்ற தலித் கூறுகையில்;" வியாழக் கிழமையன்று ஆயுதங்களுடன் வந்த ஜாட் இனத்தவர் என்னுடைய வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். என்னுடைய தந்தையும், 18 வயதான என்னுடைய சகோதரியும் வீட்டில் இருக்கும் போது வீட்டை தீ வைத்துக் கொளுத்தினர். இதில் இருவரும் பலியாகினர்." என்றார்.

இச்சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானோரின் சடலங்களைப் புதைக்க தலித்துகள் மறுத்துவிட்டனர். இப்பிரச்சனை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜாட் இனத்தைச் சேர்ந்த மிர்ச்பூர் தாசில்தாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தலித்துகள் கோரி வருகின்றனர்.மூன்று நாட்களாக நாங்கள் அளிக்கும் புகார்களை காவல்துறையினர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று தலித்துகள் குற்றும் சாட்டுகின்றனர். வியாழக் கிழமையன்றுதான் இப்பிரச்சனை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மிர்ச்பூர் கிராமத்திற்கு கூடுதல் காவல் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

தலித் இளம்பெண் எரித்துக் கொலை: ஹரியானா கிராமத்தில் வன்முறை.


சண்டிகர்:ஹரியானாவில் ஹிஸார் மாவட்டத்திலிலுள்ள ஒரு கிராமத்தில் ஊனமுற்ற தலித் இளம்பெண் ஒருவர் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.அப்பெண்ணின் தந்தைக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.தலித்துகள் வசிக்கும் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் சுமன். அவருக்கு வயது 18 ஆகிறது. இவருடைய தந்தையான தாராசந்த் 90 சதவீதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சிலர் தீவைத்ததாக கூறப்படுகிறது.

உயர்ஜாதி ஹிந்துக்கல் உடனான முன்விரோதம் இத்தாக்குதலுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. அப்பகுதியில் மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தலித் பெண்களிடம் உயர்ஜாதி ஹிந்துக்கல் சிலர் முறைகேடாக நடந்தததால் தலித் இளைஞர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலர் மீது போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர்.அதேவேளையில், வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தார்கள் என்பதுக்குறித்து சரியான விபரம் கிடைக்கவில்லை என போலீஸ் கூறுகிறது.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு.


பாரதீய ஜனதா கட்சி அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக வெகுமக்கள் யாரும் இரங்கப் போவதில்லை. காரணம் அது ஒரு பிற்போக்குத்தனமான கட்சி; மக்கள் நலன் என்கிற பரந்த பார்வை அதற்குக் கிஞ்சிற்றும் கிடையாது. இந்து மதக் கொள்கைகளையும், குறிப்பாக அதன் வருணாசிரமக் கொள்கைகளையும் உணர்ந்தோர் அதனை எந்த வகையில் ஏற்றுக் கொள்வார்கள்? பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஒரு மதத்தை சமத்துவம் விரும்புவோர், மனித உரிமைகளை நேசிப்போர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? 21 ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற கட்சிகள் இயங்குவது என்பதே பெரும் தலைக்குனிவாகும்.பிரபல பத்திரிகையாளரும், இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான குல்தீப் நய்யார் பா.ஜ.க.பற்றி சொன்ன கருத்துக் கணிப்பு, கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்பொழுதுமே தீண்டாமை பற்றி கேள்வியை எழுப்பியதே இல்லை? இந்துக் களிடையே உள்ள ஜாதி நடைமுறை மிகவும் அடக்கு முறை நிறைந்த ஒன்றாகவே உள்ளது. பா.ஜ.க.வை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இதனைச் சீர்திருத்த வேண்டும் என்று பா.ஜ.க. நினைத்திருக்கக் கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்மையைக் கூறுவதானால், அனைத்து மக்களுக்கும் பொருளாதார சமத்துவம் அளிக்கும் எந்த சட்டத்தையும் பா.ஜ.க. விரும்புவதில்லை. உயர்ஜாதி மக்களின் கட்சி அது. தொடக்க முதல் அக்கட்சிக்குப் பிரியமானது என்னவென்றால், சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்திக் கொடுமைப் படுத்துவதுதான். (டெக்கான் கிரானிக்கிள், 4.2.2008)

கணித்திருப்பவர் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர் அல்ல. அத்தகைய இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர்கூட அல்ல. ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் கடந்த 40 ஆண்டுகாலம் கணித்த முறையில் இப்படியொரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
ஜாதி அமைப்பு தேவை_ வருணாசிரமம் நல்லது என்பதுதான் சங் பரிவார்க் கும்பலின் குருநாதரான கோல்வால்கரின் வேத நூலில் மிகவும் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

செத்த பசு மாட்டின் தோலை உரித்தனர் ஐந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக, அந்த ஐவரையும் படுகொலை செய்த கூட்டம் இது. இதற்குமேல் இதன் தீண்டாமை வெறியை, ஜாதி வெறியை எடை போடுவதற்கு வேறு எந்த எடுத்துக்காட்டு தேவை? சமூகநீதியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றன.மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்தார் என்பதற்காகத்தானே. அதுவரை வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு ஒரு சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்து மகிழ்ச்சிக் கூத்தாடியது.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உமாபாரதி மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தார். அவர்மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்குக்காக அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். நேர்மையான கட்சியாக இருந்தால் பி.ஜே.பி. என்ன செய்திருக்கவேண்டும்? மீண்டும் முதல மைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்கவேண்டுமே! செய்யவில்லையே! மாறாக ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ். சுதர்சன் என்ன சொன்னார்? அம்மையாரின் பிறந்த குடியும், பிறப்பு வளர்ப்பும் சரியில்லை என்று கூறினாரே. இதன் பொருள் என்ன? பார்ப்பனரான சுதர்சனின் ஜாதிப் பார்வை இதில் பளிச்சிடவில்லையா? உமாபாரதியேகூட பி.ஜே.பி.யை உயர்ஜாதியின் கட்சி என்று விமர்சித்தது உண்டே.

இத்தகைய ஒரு கட்சி பிளவுபட்டு மேலும் மேலும் பலகீனப்பட்டு அழிவின் விளிம்பிற்குச் செல்லுகிறது என்றால், நேர்மையாக மகிழ்ச்சி அடையவேண்டும்.இக்கட்சி வளர்ந்தாலோ, ஆட்சிக்கு வந்தாலோ அதனால் மக்களின் அமைதி கெட்டு, ஒவ்வொரு நொடியும், வன்முறையிலும், வெறுப்பிலும், கலகத்திலுமே காலத்தைக் கழிக்கவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.பதவியைப் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக அக்கட்சிக்குள் ஏற்படும் சர்ச்சைகளும் குடுமிபிடிகளும் எதைக் காட்டுகின்றன? நேர்மையான சித்தாந்தமும், வழிகாட்டுதலும் அங்கு இல்லை என்பதுதான் அதற்கான விடையாகும்.இனவெறியரான அடால்ஃப் ஹிட்லர் தற்கொலைமூலம் தன் முடிவைத் தேடிக்கொண்டார்.பாசிஸ்ட், நாஜிகளின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. பி.ஜே.பி. மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

இந்திய பழங்குடி மக்களை அரக்கர்களாகவும், பிராமண உயர்ஜாதி பணக்காரர்களை ராமனாகவும் சித்தரிக்கும் தின(மலம்)மலர்.


மக்களை போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிக்கும் பொதுமக்களை அரக்கர்களாகவும் பிராமண முதலாளிகளை ராமனாகவும் சித்தரிக்கும் தினமலம்.

ஏப்ரல் 11,2010, தினமலர் செய்தி:உருவாகிறதா உள்நாட்டுப் போர்? சத்தீஸ்கர் சம்பவம் கற்பிக்கும் பாடம்: என்று தலைப்பிட்டு தினமலர் எழுதிள்ள செய்தியாவது. ராமாயணத்தில் ராமன், தண்டகாரண்யம் காட்டில் வசித்த ராட்சதர்களை விரட்டி, வதம் செய்து, அந்தக் காட்டை, சாதுக்கள் வசிப்பதற்கு உகந்த இடமாக மாற்றியதாகக் கதை உண்டு. இன்று, அதே காட்டில், அதே கதை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அப்போதைய தண்டகாரண்யம் தான், இப்போதைய தந்தேவாடா உள்ளிட்ட பல மாவட்டங்கள் அடங்கிய பகுதி.

ஏப்ரல் 6ம் தேதி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசார் 76 பேரை, மாவோவாதிகள் வழிமறித்துக் கொன்ற பகுதி.சத்தீஸ்கர் மாநிலத்தில், பழங்குடியினர் வாழும், 40,000 சதுர கி.மீ., பரப்பளவு கொண் டது பஸ்தர் பகுதி. கான்கேர், பஸ்தர், தந்தேவாடா, நாராயண்பூர், பிஜாப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை அடக்கிய, தண்டகாரண்யா காட்டுப் பகுதி. நிலக்கரி, இரும்புத் தாது, சுண்ணாம்புக் கல், தங்கம், வைரம் உட்பட 28 கனிம வளங்களைக் கொண்டது இப்பகுதி.காடுகளில் வசிக்கும் பழங்குடியினர், சுரங்கத் தொழிலை விரும்புவதில்லை. அந்த விருப் பமின்மையை, துப்பாக்கிகள் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.பஸ்தர் பகுதியில், 60 ஆயிரம் மாவோவாதிகள் உள்ளனர் என்றும், பொதுமக்கள் மாவோவாதிகளாகச் செயல்படவில்லை என்றும், சத்தீஸ்கர் காவல்துறை கணித்துள்ளது. ஆனால், மாவோவாதிகள் உருவாக்கியுள்ள, 'ஜனாதன சர்க் கார்' - மக்களால் நடத்தப் படும் அரசியல் நிர்வாகத்தின் செயல் பாட்டைப் பார்க்கும் போது, காவல் துறையின் கணிப்பு மீது சந்தேகம் எழுகிறது.

தற்போது, தண்டகாரண்யா (டி.கே.,) காடுகள், மாவோவாதிகளின் பிரதான கோட்டை. டி.கே., விடுதலை செய்யப் பட்ட பகுதி என, அவர்களால் அழைக்கப்படுகிறது. 'ஜனாதன சர்க்கார்' ஆட்சி முறையில், இந்தப் பகுதி, கிட்டத்தட்ட தனி நாடாக இயங்குகிறது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதிக்கென துல்லியமான வரைபடம் கூட கிடையாது. இதனாலேயே, இதற்கு 'அபுஜ்மாட்' - இருண்ட பகுதி என்று பெயர். அபுஜ்மாட்டில், காலம் காலமாக வசிப்பவர்கள், ஹல்பா, கோண்ட், மூடியா, மாடியா பிரிவு பழங்குடியினர். வனத்துறை அதிகாரிகளும், காட்டு விளை பொருட்களை வாங்கும் ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே, இந்தப் பழங்குடியினருடன் தொடர்பு கொண்ட வெளியாட்கள்.வனத் துறையினர் அவ்வப் போது, பழங்குடியினரின் கோழிகளையும், பெண்களையும் அபகரித்துச் சென்று விடுவர். இவர்கள் இப்படி எனில், ஒப்பந்தக்காரர்களோ, அடிமாட்டு விலைக்கு இவர்களின் விளை பொருட்களுக்கு பேரம் பேசுவர். சில நேரங்களில், பண்டமாற்று முறை போல், வெறும் உப்பை மட்டும் கொடுத்து விட்டுச் செல்வர்.

கடந்த 1980ல், ஆந்திராவில் கெடுபிடி அதிகரித்ததால், போக்கிடம் தெரியாமல் சுற்றிய மாவோவாதிகள், அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள காட்டில், தஞ்சம் புகுந்தனர். பழங்குடியினர் இவர்களை, தங்களிடம் நெருங்கவே விடவில்லை. ஆனால், இவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள, மாவோவாதிகள் அதிக சிரமப்படவில்லை.பழங்குடியினரை அடிமைகளாக நடத்திய வனத் துறையினரை விரட்டி, ஒப்பந்தக்காரர்களிடம் பேரம் பேசி, விளை பொருட்களுக்கு நல்ல விலை பெற்றுத் தந்தனர். இந்த சிறிய வெற்றிகளால், மாவோவாதிகள், பழங்குடியினர் இடையே தங்களை, மெல்ல மெல்ல நிலைப்படுத்திக் கொண்டனர்.

கடந்த 2005ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட இருந் தது. டாடா மற்றும் எஸ்சார் நிறுவனங்கள், இரும்புத் தாது சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க, மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டன.பஸ்தர் மாவட்டம், லோஹாண்டிகுடாவில் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் டாடா நிறுவனமும், தந்தேவாடா மாவட்டம், துர்லி மற்றும் பான்சியில், 7,000 கோடி ரூபாய் மதிப்பில் எஸ்சார் நிறுவனமும் ஆலைகள் அமைக்க திட்டமிட்டன. இதைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்களும் இதே போல் ஒப்பந்தம் செய்து கொண்டன.அதே ஆண்டு, ஜூன் மாதம், தந்தேவாடா மாவட்டத்தில், இந்துக்களாக மதம் மாற்றப் பட்ட பழங்குடியினர், 'சால்வா ஜுடும்' என்ற இயக்கத்தைத் துவக்கினர். சால்வா' என்பது, விஷக் காய்ச்சலைப் போக்கும் மந்திர முறை. 'ஜுடும்' என்றால், இணைப்பு.

இந்த இயக்கத்தின் நோக்கம், ஆயுதங் களால், மாவோவாதிகளை எதிர்ப்பது. இந்த இயக்கத் திற்கு, மாநில அரசின் ஆதரவு கிடைத்தது. ஆயுதம், சட்டப் பாதுகாப்பும் கிடைத்தது.இந்த இயக்கத்தின் ஆறு மாதச் செயல்பாட்டில் நேர்ந்த விளைவு, தந்தேவாடா, பிஜாப் பூர் மாவட்டங்களில், 644 கிராமங்கள் சூறையாடப்பட்டன. 60,000 பேர் அகதிகளாக அரசு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஒன்றரை லட்சம் பேர் வட ஆந்திர பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் இல்லை. இத்தகைய சட்ட வரம்பை மீறிய, அடக்குமுறை கொள் கைகளால், 2005ல் இருந்து வன்முறை அதிகரித்தது. சுப்ரீம் கோர்ட்டும், 'சால்வா ஜுடும்' இயக்கத்தையும், மாநில அரசையும் கண்டித்தது. ஆனால், மாநில அரசு, அந்த இயக்கத் திற்கு அளித்து வந்த ஆதரவை நிறுத்தவில்லை.

அதே ஆண்டு டிசம்பர் மாதம், சத்தீஸ்கர் சிறப்பு பொதுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம், யாரை வேண்டுமானாலும், பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, கோர்ட் உத்தரவு இல்லாமலேயே, சிறை வைக்க முடியும். அதன் பிறகு 2008ல், சத்தீஸ் கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, 'சால்வா ஜுடும்' இயக்கத்தினர், ஆயிரம் பேரைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால், ஒப்பந்தங்கள் செய்து பல ஆண்டுகள் ஆகியும், மாவோவாதிகளின் அச்சுறுத்தல், நில ஆர்ஜிதப் பிரச்னை ஆகியவற்றால், கனிம நிறுவனங்கள் செயல்பட முடியாமல் தவித்தன.

சத்தீஸ்கர் மாநில முதன் மைச் செயலர் வைஜேந்திர குமார், 'மாவோவாதிகளின் அச்சுறுத்தலால் தான், பஸ்தர் பகுதியில், கனிம நிறுவனங்களின் திட்டங்களைத் துவக்க முடியவில்லை' என, வெளிப்படையாகக் கூறினார். வர்த்தக நிறுவனங்களும், இது குறித்து, கவலை தெரிவித்தன.ஜெர்மனியை மையமாகக் கொண்ட டாய்ச் வங்கி கூட, ஏப்ரல் 2ம் தேதி தன் அறிக்கையில், 'மாவோவாதிகளை இந்தியா ஒடுக்காவிட்டால், மின்சாரம் மற்றும் கனிமத் துறைகளில் தன்னிறைவு பெற முடியாது' என, கூறியுள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 15ல், அனைத்து மாநில காவல் துறைத் தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். அப்போது, 'நம் நாட்டின் பாதுகாப்புக்கு முதன்மையான அச்சுறுத்தல், மாவோவாதிகள் தான். ஆனால், அவர்களுக்கு, பழங்குடியினர் மற்றும் அறிஞர்கள் சிலரின் ஆதரவு உள்ளது. எனவே, இந் தப் பிரச்னையை மிக நுட்பமாகக் கையாள வேண் டும்' என்றார்.அதன் பிறகே, மத்திய அரசின் தீவிர பரிசீலனைக் குப் பின், 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்' திட்டம் துவக்கப் பட்டது. திட்டத் தின்படி, ஏற்கனவே உள்ள 20 ஆயிரம் துணை ராணுவப் படையினருடன், மேலும் துணை ராணுவப் படையினர் 40 ஆயிரம் பேர், பஸ்தர் பகுதியில், சாரை, சாரையாகக் குவியத் தொடங்கினர்.

உளவுத் துறை உதவியுடன், மாவோவாதிகளை மட்டும் அழிப்பது, மாவோவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது, அந்த இடங்களில், அரசு நிறுவனங் களை அமைப்பது ஆகியவையே, 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்'டின் குறிக்கோள். இந்த நடவடிக்கையின் போது, ராணுவத்தைப் பயன் படுத்தக் கூடாது, பீரங்கி மற் றும் வான்வழித் தாக்குதல் ஆகியவை மேற்கொள்ளக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட் டது.ஆனால், ஏப்ரல் 6ம் தேதி நடந்த சம்பவத்தை பார்க்கும் போது, 'கிரீன்ஹன்ட்' வியூகங் களின் குறைபாடுகள் தெரிந் தன.மத்திய துணை ராணுவப் படையினருக்கு, மாவோவாதிகளைக் கையாள போதுமான பயிற்சி வழங்கப்படவில்லை என்று சத்தீஸ்கர் காவல் துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்கனவே கூறி வருகின்றனர்.

வனப் போரில் ஈடுபடுவோருக்கு, பிரத்தியேக பயிற்சி அளிக்க, கான்கேர் மாவட்டத் தில், 'வனப் போர் பயிற்சி மையம்' உள்ளது. ஆனால் இங்கு, ஓராண்டில், 600 பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்க முடியும். 'பயிற்சி பெறாதவர்கள், மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபடுவர்' என, இம்மையத்தின் துணை இயக்குனர், கர்னல் ஜோகிந்தர் கூறுகிறார்.பஸ்தர் பகுதியின் நிலைமை நமக்கு விளக்குவது, 60 ஆயிரம் வீரர்களை, 60 ஆயிரத்திற்கு மேற் பட்ட மாவோவாதிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதே.வெறும் படை பலத்தின் மூலம், இந்தப் போரில் வெல்ல முடியாது என்பது, பாதுகாப்பு அதிகாரிகளின் ஒருமித்த கருத்து.

சத்தீஸ்கர் டி.ஜி.பி., விஷ்வ ரஞ்ஜன் கூறுகையில், 'படைபலத்தைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவோவாதிகளுக்கு நெருக்கடி மட் டுமே கொடுக்க முடியுமே தவிர, அவர்களிடம் போரிட்டு வெல்ல முடியாது' என்கிறார். காஷ்மீரை முன்னுதாரணமாகக் காட்டி, பேச்சுவார்த்தைகளால் தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என, அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, மத்திய உள்துறை அமைச்சரோ, 'மூன்று ஆண்டுகளில் மாவோவாதிகளை அழித்து விடுவோம்' என, பிடிவாதமாக கூறுகிறார். ஏப்ரல் 6 தாக்குதலுக்கு பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இனி பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை.'பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பேசினால், 76 வீரர்களின் உயிர்த் தியாகத்தை கேலி செய்வதாக ஆகிவிடும்' என்கிறார். முழு வீச்சில் உள்நாட்டுப் போர் உருவாவதற்கான வாய்ப் புகளைக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பின்னடைவுக்குப் பின்னும், அடக்குமுறைகளை அதிகரிக்கும் திசையில் மத்திய அரசு பயணிக்கிறது.இந்த ராமாயணம் 2ல், யார் எந்த கதாபாத்திரம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கனிம நிறுவனங்கள் என்ற சாதுக்கள், இப்பகுதியில் எப்போது குடியேறப் போகின்றனர் என்பது தெரியவில்லை.இந்த ராமாயணமும், கம்பர் எழுதியதைப் போல், முடிவுக்கு வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. ஏனெனில், இந்த முறை ராட்சதர்கள், நாட்டில் 223 மாவட் டங்களிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்; ராமனின் கைகளும், ஜனநாயகத்தால் கட்டப்பட்டுள்ளன.எப்படி செயல்படுகின்றனர் மாவோவாதிகள்?மாவோவாதிகளில், 5,000 பேர், இந்திய ராணுவத்துக்கு இணையாக பயிற்சி பெற்றுள்ளனர்; மேலும், 5,000 பேர், அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர்; 50 ஆயிரம் பேர், ஆயுதப் பயிற்சி மற்றும் கண்ணி வெடி வைப்பதில் பயிற்சி பெற்றுள்ளனர் என, போலீசார் கணக்கிட்டுள்ளனர்.

ஆயுதங்கள்: ஒவ்வொரு மாவோவாத கம்பெனியும், நான்கு இலகு ரக இயந்திர துப்பாக்கி, எஸ்.எல். ஆர்.,கள், 'இன்சாஸ்' ரைபிள்கள், ஏ.கே., ரக துப்பாக்கிகள், சிறு பீரங்கிகள் மற்றும் ஆர்.பி.ஜி., துப்பாக்கிகள் ஆகியவை வைத் துள்ளனர். இது கிட்டத்தட்ட, இந்திய ராணுவத்திற்கு இணையாக உள்ளது.தாக்குதல் முறைகள்: வாகனங்களால் இடித்து தள்ளிவிட்டு தப்பி செல்வது, பதுங்கியிருந்து தாக்குவது, புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்புவது, சாலையில்லாத பகுதிகளில் கண்ணி வெடிகள் வைப்பது.சாதகங்கள்: ஆயுதங்களைக் கடத்தவும், புலனாய்வுப் பணிகளுக்கும் உள்ளூர் மக்கள் ஆதரவு. எப்போது வேண்டுமானாலும் கூடி, கலையும் போர்க் குழு. நிலப்பகுதிகள் குறித்த பரந்த அறிவு.

கட்டுரை எழுதிய நான் ஒரு பிராமணன் தாழ்த்தபட்ட உழைக்கும் மக்களின் எதிரி: நன்றி: கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்களே.

நன்றி தினமலம் நாளிதழ்.

இந்திய அரசு பயங்கர வாதத்திற்கு சரியான தண்டனை.


புதுடெல்லி:சட்டீஷ்கர் மாநிலம் தண்டே வாடாவில் இரண்டு தினங்களுக்கு முன்பு சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மீது நடந்த தாக்குதலை நடத்தியவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என அத்தாக்குதலில் காயமடைந்து உயிர்தப்பிய சி.ஆர்.பி.எஃப் படை வீரர் கூறியுள்ளார்.கடுமையாக காயமுற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிட்சையிலிருக்கும் சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் ஆதித்யாசிங்(வயது 21) என்பவர்தான் இதனை தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று உறுதிச்செய்த பின்னரே மாவோயிஸ்டுகள் திரும்பிச் சென்றனர். அப்பொழுது ஆதித்யாசிங் தான் இறந்தது போல் நடித்துள்ளார். மேலும் ஆதித்யா சிங் கூறியதாவது: "நவீன ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் வைத்திருந்தனர். மோதல் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.

மாவோயிஸ்டுகள் எல்லா இடத்திலும் வெடிக்குண்டுகள் வைத்திருந்தனர். தாக்குதல் நடந்தபொழுது நாங்கள் திருப்பித் தாக்கினோம். நான் மட்டும் 120 குண்டுகளை சுட்டேன். அவர்களில் சிலர் குண்டடிப்பட்டு கீழே விழுந்தனர். துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்தவுடன் வேறொரு இடத்திற்கு மாறினோம். அங்கே மாவோயிஸ்டுகள் வெடிக்குண்டு வைத்திருந்ததால் அது வெடித்து பல சி.ஆர்.பி.எஃப் ஜவான்களும் கொல்லப்பட்டனர். வெடிக்குண்டு வெடித்ததைத் தொடர்ந்து நான் நினைவிழந்தேன்.

மாவோயிஸ்டுகள் எனக்கு அருகில் வருவதை நான் அரை மயக்கத்தில் கண்டேன். அவர்களில் பெண்கள் அதிகமிருந்தனர். நான் இறந்துவிட்டேனா என்பதை உறுதிச்செய்ய என்னை உதைத்துப் பார்த்தார்கள். அப்பொழுது நான் உணர்வில்லாதவன் போல் கிடந்தேன். நான் இறந்துவிட்டேன் எனக்கருதி அவர்கள் என்னை விட்டுச்சென்றனர். நான் என்னுடைய சக படைவீரர்களின் உடல்களுக்கு மத்தியில் கிடந்தேன்.

சுற்றுவட்டாரத்தில் மிகக்குறைவான ஆதிவாசிகளே உள்ளனர். அவர்களுக்கு எங்களுக்கு உதவ பயம். சி.ஆர்.பி.எஃப் உதவிக்காக வரும் வரை நான் இரத்தம் வெளியேறிக் கிடந்தேன்." இவ்வாறு ஆதித்யா தெரிவித்தார்.ஆதித்யா சிங்கிற்கு நிறைய குண்டுகள் தாக்கியுள்ளன. அவருடைய இடது கண்ணின் பார்வை நஷ்டமடைந்துள்ளது. ஆதித்யா இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.

முஸ்லிம் சமுதாயமே உணர்ந்துகொள்:
இந்திய அரசு நடத்தும் பயங்கரவாதத்திற்கு சரியான தண்டனை. இந்த இதயம் அழுகிய காவல் துறை கயவர்கள் முஸ்லிம்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயகரவாத தாக்குதல்களுக்கு முஸ்லிம்களால் பதில் சொல்ல தென்பும் திராணியும் இல்லாது இந்த நீதிமன்ற கயவர்களை நாடி நீதியும் கிடைக்காமல் எத்தனை முஸ்லிம் மக்களும் தாழ்த்த பட்ட மக்களும் அலை கழிக்க பட்டார்கள். அவர்களது பிரார்த்தனைக்கு கிடைத்த பலன். முஸ்லிம் தலைவர்கள் போலி ஜனநாயகம் போசி முஸ்லிம்களை பாதுகாக்கிறோம் என்று நேரத்தை வீண் செய்யாமல் ஒரு ஆயூத போராட்டத்தை நோக்கி போனால் தான் இதற்க்கு ஒரு தீர்வு கிடைக்கும். சிந்திப்பார்களா? இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி கருவறுக்க பார்கிறார்கள். இந்தியாவில் மத சார்பின்மை என்பது ஏட்டளவில் தான் உள்ளது. இதனால் இந்த ஒட்டு பொருக்கி அரசியல் வாதிகளை நம்பாமல். சீக்கிரமாக ஒரு ஆயூத போராட்டத்திற்கு தயாராகுங்கள். இலையேல் எதிர் காலத்தில் இந்தியாவில் முஸ்லிம் என்றொரு சமுகம் இருந்ததா என்று கேட்க்க வேண்டி வரும்.
Read more...