வெள்ளி, 10 டிசம்பர், 2010

காஞ்சி கொலைகார காம கேடி சங்கராச்சாரி போலியா?: தினமலர்???

பார்ப்பன ஏடுகள் பக்தியைப் பரப்புவதில் - மூட நம்பிக்கைகளைக் குழைத்துத் தருவதில் முன்னணியில் எப்பொழுதும் இருப்பவை - தொழில் போட்டியில் பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக இதழ்களை நடத்திக்கொண்டு திரிகின்றனர் - நாய்விற்ற காசு குரைக்கப்போவதில்லையே!

போலிச் சாமியார்களை நம்பாதீர்கள்! என்ற ஒரு தலைப்பிலே தினமலர் வார மலர் (தினமலம்28.11.2010) ஒரு கட்டுக் கதையை வெளியிட்டுள்ளது.திருக்கோயிலூரைத் தலை நகரமாகக் கொண்டு மெய்ப் பொருளார் என்பவர் ஆட்சி செய்து வந்தாராம். திருநீறுப்பூசிய சைவ மெய்யன்பர்கள் மீது ஏகப்பட்ட மரியாதையாம் அவருக்கு. முத்தநாதன் என்பவர் ஒரு நாத்திகனாம் - மெய்ப்பொருளாரின் பலகீனத்தைப் பயன் படுத்தி உடல் முழுவதும் திருநீறு அணிந்து அந்த அரசனைப் பார்க்க வந்தாராம்.

திருநீறு அணிந்த சாமியார்கள் வந்தால் அவர்களைத் தடுக்கக் கூடாது என்பது அரசக் கட்டளையாம்; அதனால் அந்த முத்தநாதன் அரசரின் அந்தப் புரத்திற்குள்ளேயே நுழைந்து விட்டானாம். ராணியுடன் அந்தப்புரத்தில் இருந்த அரசன் திடுக்கிட்டான்; ஆனால், திருநீறு கோலத்தில் வந்துவிட்டாரே, அரசன் என்ன செய்வான்?

திருநீறு அணிந்த ஆசாமியின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபோது மறைத்து வைத்திருந்த வாளால் தாக் கினாராம்; அவனைக் கொல்ல காவலாளி முயன்றபோது திரு நீறுப் பூசியவரைக் கொல்லக் கூடாது என்று அரசன் உத்தரவிட்டானாம். தன் பக்தனின் உண்மைப் பக்தியைக் கண்டு வழக்கம் போல சிவபெருமான் அங்குத் தோன்றி உயிர்நீத்த மெய்ப் பொருளாராகிய அரசனுக்கு உயிர் கொடுத்தானாம். அதன் பின் அரசன் பல காலம் சிவத்தொண்டு செய்ய கைலாயத்துக்கு அனுப்பி வைத்தாராம் சிவன்.

இந்த சிவன் தன் மதக் கோட்டைத் தாண்டி மற்ற மதப் பக்தர்களைச் சோதிக்கமாட்டார். அடுத்த மதக்காரன்தான் இந்தக் கடவுளைச் சீண்ட மாட்டானே! தன் பக்தனை சோதித்துத்தான் ஒரு கடவுளால் உணர முடியும் என்றால், அவன் எப்படி சர்வ சக்திக் கடவுளாவான்?
நாத்திகனைக் கொலையாளி என்று காட்டவும், வேடக்காரன் என்று காட்டவும் புனையப்பட்ட கதை இது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த அத்வானியும், கரசேவர்களும் நாத்திகர்களா? பக்தர்கள்தானே! இன்னொரு மதக்கடவுள் சம்பந்தப்பட்ட நினைவிடத்தையல்லவா அடித்து நொறுக்கினார்கள்? எந்த நாத்திகன் எந்தக் கோயிலை இடித்தான்? நிரூபிக்க முடியுமா?
கடைசியாக தினமலர் என்ன கூறி முடிக்கிறது? போலிச் சாமியார்களை அவர்களின் உருவத்தைக் கண்டு கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறது.சாமியார்களில் என்ன ஒரிஜினல் சாமியார்? போலி சாமியார்? யானை லத்தியில் முதல் லத்தி என்ன, இரண்டாம் லத்தி என்ன? அதுசரி, காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சாமியார்? போலியா? ஒரிஜினலா? தினமலர், தின மணி, கல்கி, சோ கூட்டம் கொஞ்சம் பதில் சொன்னால் நல்லது! thanks - மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக