ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

நாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தலித்கள் உயிருடன் எரித்துக் கொலை.


தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடைய நாய் தொடர்பாக ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றி தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் உயிரோடு எரியூட்டப்பட்டனர்.ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த யோகேஷ் என்பவரின் நாய் மீது ஜாட் இனத்தைச் சேர்ந்த ராஜேந்தர் கல் எறிந்தார். இதற்கு யோகேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கூட்டப்பட்ட கிராமப் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்நதது. இதனைத் தொடர்ந்து தலித்துகள் ஜாட் இனத்தவரால் தாக்கப்பட்டனர்.

இரு இனத்தவருக்குமான மோதல் முற்றி ஜாட் இனத்தவர் தலித்துகளின் 25 வீடுகளை தீயிட்டுக் கொழுத்தினர். இதில்இரண்டு தலித்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.இதுக்குறித்து தாரா சந்த் என்ற தலித் கூறுகையில்;" வியாழக் கிழமையன்று ஆயுதங்களுடன் வந்த ஜாட் இனத்தவர் என்னுடைய வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். என்னுடைய தந்தையும், 18 வயதான என்னுடைய சகோதரியும் வீட்டில் இருக்கும் போது வீட்டை தீ வைத்துக் கொளுத்தினர். இதில் இருவரும் பலியாகினர்." என்றார்.

இச்சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானோரின் சடலங்களைப் புதைக்க தலித்துகள் மறுத்துவிட்டனர். இப்பிரச்சனை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜாட் இனத்தைச் சேர்ந்த மிர்ச்பூர் தாசில்தாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தலித்துகள் கோரி வருகின்றனர்.மூன்று நாட்களாக நாங்கள் அளிக்கும் புகார்களை காவல்துறையினர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று தலித்துகள் குற்றும் சாட்டுகின்றனர். வியாழக் கிழமையன்றுதான் இப்பிரச்சனை குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மிர்ச்பூர் கிராமத்திற்கு கூடுதல் காவல் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக