வியாழன், 13 மே, 2010

நொய்டா படுகொலைகள்:சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை.


நொய்டாவில் நிதாரி கிராமத்தில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேந்தர் கோலிக்கு(38) மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2006-ம் ஆண்டு நிதாரி கிராமத்தில் 19 குழந்தைகளும் பெண்களும் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இதில், ஆர்த்தி என்னும் 7 வயது சிறுமியை கோலி கொலை செய்தது நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.கே.சிங் தீர்ப்பளித்தார்.

மொகீந்தர் சிங் பாந்தர் என்பவரின் வீட்டில் சுரேந்தர் கோலி பணியாற்றி வந்தார். இந்த வழக்கில், பாந்தர் தண்டனையின்றி தப்பிவிட்டார் என்று நிதாரி கிராம மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.ஏற்கெனவே, ரிம்பா ஹால்தர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மொகீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அலகாபாத் நீதிமன்றம் பாந்தரை விடுவித்து தீர்ப்பளித்தது.நிதாரியில் கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்கள் பாந்தரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள சாக்கடைகளில் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக