ஞாயிறு, 12 டிசம்பர், 2010

இலங்கையில் இனி சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் பாடப்படும்.

கொழும்பு: இனவெறியின் எல்லைகளை காட்டாறு போல கட்டறுத்து ஓடிக் கொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு. எப்படியெல்லாம் தமிழையும், தமிழைனையும் கொல்ல முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகிறது ராஜபக்சே அரசு.தற்போது அதில் ஒரு முக்கிய நிகழ்வாக, இனிமேல் இலங்கையில், தேசதிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும், தமிழில் பாடப்பட மாட்டாது என்ற முடிவை எடுத்துள்ளதாம் ராஜபக்சே அரசு.

தற்போது சிங்களத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஆனால் தற்போதுதான் ஒரே நாடாகி விட்டதே, இனியும் எதற்கு தமிழ் என்று பேசி வருகிறாராம் ராஜபக்சே. இதையடுத்து இனிமேல் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடினால் போதும் என்று அவர் முடிவெடுத்துள்ளாராம்.

லண்டனுக்குப் போன ராஜபக்சேவுக்கு தமிழர்கள் கொடுத்த பிரமாதமான வரவேற்பினால் வெகுண்டு திரும்பிய பின்னர் அவர் அமைச்சரவையைக் கூட்டி எந்த நாட்டிலும் பல மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அப்படிஇருக்கையில் இலங்கையில் மட்டும் ஏன் இரு மொழிகளில் பாட வேண்டும் என்று கேட்டாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக