சனி, 30 ஜூலை, 2011

சுதந்திரம் என்பது நமது உரிமை PFI.

நெல்லை : 65-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம் கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது.


குறிப்பாக கடந்த 3-ஆண்டுகளாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி சிறப்பித்து வருகின்றது. இவ்வருடமும் ஆகஸ்ட் 15-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்துள்ளோம். சுதந்திரப் போரின் ஆணிவேராய் இருந்தவர்களையும் போராட்டக் களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல்களையும் நினைவு கூறவேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

உடல் வலிகளையும் உயிர் அர்பணிப்புகளையும் பொருட்படுத்தாது போராடிப் பெற்ற சுதந்திரத்தை ஆகஸ்ட் 15-ல் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் தேச வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட உள்ளத்துடனும் கொண்டாட வேண்டும். இவற்றை வெளிப்படுத்திடும் விதத்தில்தான் சுதந்திர முழக்கமிட்டு வீர நடைபோட்டு பாப்புலர் ஃப்ரணடின்; சீருடை அணிந்து சுதந்திர தின அணிவகுப்பை கொண்டாடி வருகின்றது.

இந்திய வளங்கள் நவீனப் பெயர்களில் அந்நியர்களுக்கு தாரை வார்க்கப்படுவதும் தேச குடிமக்கள் வேலையின்றி அடிமை குடிமக்களாக மாற்றப்படும் அவல நிலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஊழலுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளும் கடுமையான தண்டனைகளும் அமலாக்கப்பட வேண்டும்
அரசியலுக்காக தேசத்திற்குள்ளேயே குண்டு வெடிப்புக்களையும் கலவரங் களையும் ஏற்படுத்தி மாற்றானை குற்றம் சுமத்தி தேசபக்தி வேடமிட்டு அரசியல் பிழைப்பு நடத்திவரும் சங்கப்பரிவார பாசிஸ்ட்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவு கூர்ந்திடவும் தியாகிகளை கௌரவித்திடவும் இதைக் கண்டு குடிமக்கள் மகிழ்ந்திடவும் போதிய உரிமைகள் வழங்கப்படவில்லை. சுதந்திரத்தின் நினைவலைகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கொண்டாடி மகிழ்ந்திடும் நிலையை ஏற்படுத்திட மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்புரிந்து வரும் தமிழக அரசு முன்வர வேண்டும். மக்களின் மகிழச்சிக்கு அரசு நிச்சயமாக உறுதுணையாக இருக்குமென்று நம்புகிறோம்.

இவ்வருடத்தின் சுதந்திர தின அணிவகுப்பில் வீறு நடைபோட்டு போர்பரணி எழூப்பி வீரமுரசு கொட்டி நீதியின் போராளிகளாக சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் 1000 செயல் வீரர்கள் அணிவகுக்க உள்ளனர். சுதந்திர தினத்தினை அணிவகுத்து கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய காரணியாக செயல்பட்ட பத்திரிக்கை துறையைச் சேர்ந்த ஊடக நண்பர்களும் பாப்புலர் ஃப்ரண்டோடு இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக