செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இந்தி பேசும் 'கமாண்டோக்கள்' வேண்டும்- இந்திக்காரர்கள் கூடாதா? தாக்கரேக்களுக்கு ராகுல் கண்டனம்.

வட இந்தியர்களை தொடர்ந்து குறி வைத்து கடித்துக் கொண்டிருக்கும் பால் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரை நேற்று கடுமையாக கண்டித்துப் பேசினார் ராகுல் காந்தி.

பீகார் மாநிலம், புத்தகயா வந்த அவர் அங்கு தலித் இளைஞர் தலைமைத்துவ மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது பேசுகையில், மகாராஷ்டிராவில், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, பீகாரிகளையும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மகாராஷ்டிராவை விட்டும், மும்பையையும் விட்டும் தூக்கி எறிய வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், மும்பையைத் தீவரவாதிகள் தாக்கியபோது அவர்களைக் கொன்றது யார்? அவர்கள் அனைவரும் பீகாரிகள், உ.பியைச் சேர்ந்தவர்கள் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அப்போது பீகாரிகளைத் தூக்கி எறிய வேண்டும் என்று அவர்கள் ஏன் சொல்லவில்லை?.

இந்தி பேசும் கமாண்டோக்கள் இருக்கலாம், ஆனால் இந்தி பேசுவோர் இருக்கக் கூடாதா? தீவிரவாதிகளுடன் சண்டை போடவாவது பீகாரிகள் அங்கேயே இருக்கட்டுமே என்றார் ராகுல் காந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக